Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை-தூத்துகுடி 10 வழிச்சாலை: மத்திய அரசு முடிவு

Webdunia
சனி, 19 ஜனவரி 2019 (13:24 IST)
சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த நிலையில் இந்த திட்டத்திற்கு நிலம் தர விவசாயிகள் மறுப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது தெரிந்ததே

இந்த நிலையில் மத்திய அரசு சென்னையில் இருந்து தூத்துகுடி வரை 10 வழிச்சாலை ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளது.  : சென்னை - தூத்துக்குடி வரையிலான இந்த 10 வழிச்சாலை சுமார் ரூ13,200 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ளது.

சென்னையில் இருந்து விழுப்புரம் வரை இந்த சாலை 10 வழியாகவும், விழுப்புரத்தில் இருந்து தஞ்சாவூர், திருச்சி வரை 8 வழியாகவும் அதன் பின் திருச்சியில் இருந்து தூத்துகுடி வரை 6 வழிச்சாலையாகவும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய சாலையால் சென்னை - தூத்துக்குடி வரையிலான தூரம் 100 கி.மீ. வரை குறையும் என்றும் பயண நேரமும் சுமார் 2 மணி நேரம் குறையும் என்றும், சென்னைக்கும் தூத்துகுடிக்கும் இடையிலான வர்த்தகங்கள் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments