Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவதில் தாமதம் – வானிலை ஆய்வு மையம்

Webdunia
ஞாயிறு, 28 நவம்பர் 2021 (12:21 IST)
நாளை வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என கூறப்பட்ட நிலையில் தற்போது அது தாமதமாவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவது தள்ளி போவதாக தெரிவித்துள்ளது. அதன்படி நாளைக்கு பதிலாக நாளை மறுநாள் நவம்பர் 30ம் தேதியன்று அந்தமானை ஒட்டி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என கூறப்பட்டுள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு நிலை வடமேற்கு திசை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஒரே இரவில் நான்கு கோவில்கள் உண்டியல் உடைப்பு- பல ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை

காட்டு யானை ரேஷேன் கடை கட்டிடத்தை உடைத்து கதவுகளை நொறுக்கி அட்டகாசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments