Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவதில் தாமதம் – வானிலை ஆய்வு மையம்

Webdunia
ஞாயிறு, 28 நவம்பர் 2021 (12:21 IST)
நாளை வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என கூறப்பட்ட நிலையில் தற்போது அது தாமதமாவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவது தள்ளி போவதாக தெரிவித்துள்ளது. அதன்படி நாளைக்கு பதிலாக நாளை மறுநாள் நவம்பர் 30ம் தேதியன்று அந்தமானை ஒட்டி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என கூறப்பட்டுள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு நிலை வடமேற்கு திசை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிப்டோ கரன்சியை பரிமாற்றம் செய்யும் நிறுவனம் ஹேக்.. ரூ.379 கோடி இழப்பா?

முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த், கமல்ஹாசன்.. விரைவில் குணமாக வாழ்த்து..!

பள்ளி மீது நொறுங்கி விழுந்த விமானம்.. 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு என்ன ஆச்சு? பெரும் பதட்டம்..!

நான் எதிர்க்கட்சி தலைவர்.. என்னையே பேச அனுமதிக்கவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை! ஏழை குழந்தைகள் உயிர்னா இளக்காரமா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments