Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய தலைமைச்செயலகம் கட்டியதில் முறைகேடு ! தி.மு.க கலக்கம்...

Webdunia
புதன், 14 நவம்பர் 2018 (15:44 IST)
புதிய தலைமைச்செயலக விவகாரத்தை லஞ்ச ஒழிப்பு துறைக்கு மாற்றுவதற்கு எதிரான தீர்ப்பு ஒத்திவைத்துள்ளது  உயர் நீதிமன்றம்.

இவ்வழக்கின் ஆரம்ப கட்ட விசாரணையில் முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யப்படும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
 
ஏற்கனவே ரூ - 325கோடி இழப்பு ஏற்பட்டடதாக அரசு கூறியிருந்த நிலையில் தற்போது ரூ 629 கோடி என குற்றச்சாட்டு கூறியுள்ளது.
 
மேலும் புதிய தலைமைச்செயலகம் கட்டியதில் ரூ.629 கோடி முறைகேடு நடந்துள்ளதாகவும் உயர்நீதிமன்றத்தில் அரசு புகார் தெரிவித்திருந்தது.
 
இந்நிலையில் தலைமை செயலகத்தில் முறைகேடு என்பதால் சாதாரணமாக விட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
 
இதனையடுத்து மு.க .ஸ்டாலின் தொடர்ந்த வழக்கின் தேதியை குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம். 
இதனால் முந்தைய திமுக ஆட்சியின் போது கட்டப்பட்டு திறப்பு விழா காணப்பட்ட புதிய தலைமைச்செயலகம் விவகாரத்தில் முறைகேடு நடந்திருப்பதாக ஆளும் அதிமுக அரசு உறுதியாகக் கூறியுள்ளதால் திமுகவினர் பலரும் கலக்கத்தில் உள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments