மனித நேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகிகளை நியமித்து அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து அக் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
துணைத் தலைவர் - ஷிபியுல்லாஹ் கான் (திருச்சி மாவட்டம்), துணைப் பொதுச் செயலாளர்கள் - ஜெய்னுல் ஆபிதீன் (ராமநாதபுரம் மாவட்டம்), கோவை செய்யது (கோவை மாவட்டம்), ஜோசப் நொலஸ்கோ (தூத்துக்குடி மாவட்டம்).
தலைமை பொதுக் குழுவில் அப்துல் சமது பொதுச் செயலாளராகவும், ரஹ்மத்துல்லாஹ் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்று அக் கட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.