Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யானை வரும் முன்னே, மணியோசை வரும் பின்னே: உளறிய ஸ்டாலின், கலாய்த்த நெட்டிசன்கள்

Webdunia
வெள்ளி, 23 மார்ச் 2018 (17:01 IST)
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கலைஞர் கருணாநிதி போல் அடுக்குமொழியிலும் பேசுவதில்லை, தமிழ் மொழியை பிறழாமலும் பேசுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. கடந்த ஆண்டு சுதந்திர தினத்தை குடியரசு தினம் என்றும், பிரதமர் மோடி என்பதற்கு பதிலாக பிரதமர் மன்மோகன்சிங் என்றும் பேசி நெட்டிசன்களின் கலாய்ப்புக்கு உள்ளானார்.

இந்த நிலையில் ஸ்டாலின் சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் பேசியபோது, 'யானை வரும் முன்னே, மணியோசை வரும் பின்னே என்று பழமொழியையே மாற்றி பேசியுள்ளார். ஸ்டாலினின் இந்த பேச்சை நெட்டிசன்கள் விடாமல் கலாய்த்து வருவதால் #ஸ்டாலின்பழமொழிகள் என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டுவிட்டரில் டிரெண்ட் ஆகிவிட்டது. இதனால் திமுக தொண்டர்கள் தர்மசங்கடத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்த விழாவில் ஸ்டாலின் குறிப்பை பார்த்தபடியே பேசினார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அப்படியானால் அவருக்கு குறிப்பு எழுதி கொடுத்தவர்கள் தவறாக எழுதி கொடுத்துவிட்டார்களா? அல்லது ஸ்டாலின் தான் கவனக்குறைவால் மாற்றி பேசிவிட்டாரா? என்பது தெரியவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments