Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடும் குடிதண்ணீர் தட்டுப்பாடு.. காலி குடங்களுடன் முற்றுகையிட்டுள்ள கிராம மக்கள்..!

Webdunia
திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (12:08 IST)
நெல்லை மாவட்டத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் காலி குடங்களுடன் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
நெல்லை மாவட்டத்தை சுற்றியுள்ள பல கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக கடந்த சில நாட்களாக புகார் எழுந்தது. நெல்லை மாவட்டத்தில் உள்ள நெல்லைதிருத்து, முனைஞ்சிப்பட்டி, பத்தினி பாறை ஆகிய பகுதிகளில்  குடிதண்ணீர் ஏற்பாடு செய்யுமாறு மக்கள் கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
 
இதனை அடுத்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மேற்கண்ட கிராமத்து மக்கள் காலி குடங்களுடன் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அசம்பாவிதம் ஏற்படாத வகையில் காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.  
 
குடிநீர் தட்டுப்பாடு உள்ள கிராமங்களில் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments