Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை மதுக்கடைகளை மூட வேண்டும்: அதிரடி உத்தரவு பிறப்பித்த கலெக்டர்

Webdunia
வெள்ளி, 29 அக்டோபர் 2021 (13:49 IST)
நாளை மதுக்கடைகளை மூட வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30-ஆம் தேதி தேவர் ஜெயந்தி கொண்டாடப்படும் என்பதும் அந்த நாளின் போது ஆயிரக்கணக்கானோர் தேவர் சமாதியில் அஞ்சலி செலுத்துவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்தநிலையில் நாளை தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளதை அடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனையடுத்து இன்றே குடிமகன்கள் போதுமான மது வகைகளை வாங்கி குவிக்க ஆரம்பித்து விட்டனர் என்பதும் இதனால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் தற்போதே கூட்டம் அதிகரித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
மேலும் நாளை மது வகைகளை கள்ளச் சந்தையில் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. இன்று மாலை நிலவரம் என்ன?

திடீரென வீட்டுக்குள் புகுந்த முதலை.. கயிறு கட்டி மேலே தூக்கிய தைரியமான வாலிபர்..!

ஞானசேகரனை ஒரு தியாகி போல் திமுகவினர் சித்திரித்தனர்.. தவெக அறிக்கை..!

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: டெல்லி மாணவர் முதலிடம்

நான் தெர்மகோல் விஞ்ஞானியாவே இருந்துட்டு போறேன்.. நீங்க என்ன செஞ்சீங்க? - செல்லூர் ராஜூ விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments