இன்னும் 3 நாட்களில் நீட்! பதட்டத்தில் கிணற்றில் குதித்த மாணவர்!

Webdunia
புதன், 9 செப்டம்பர் 2020 (12:44 IST)
மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வு நடைபெற இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் மன உளைச்சலால் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காரணமாக மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வு நடத்தப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டு வந்த நிலையில் செப்டம்பர் 12 அன்று நீட் தேர்வுகள் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நீட் நுழைவு தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார் அரியலூர் மாவட்டம் எலந்தங்குழியை சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர்.

நீட் தேர்வுக்காக பல மாதங்களாக தயாராகி வந்த அவர் சில தினங்களில் தேர்வு நடைபெற உள்ள நிலையில் அதிகமான மன அழுத்தம் காரணமாக கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். முன்னதாக நீட் தேர்வு மன அழுத்தத்தின் காரணமாக மாணவி ஒருவர் உயிரிழந்த நிலையில் தற்போது மாணவர் ஒருவரும் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்யார்' புயல் உருவானது: வானிலை ஆய்வு மையம் தகவல்.. தமிழகத்திற்கு பாதிப்பா?

இந்தியா ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு அல்ல, அனைவருக்கும் சொந்தமானது: முதல்வர் ஸ்டாலின்

2 நாள் சரிவுக்கு பின் இன்று ஒரே நாளில் உச்சத்திற்கு சென்ற பங்குச்சந்தை: இன்றைய நிப்டி நிலவரம்..!

தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.95,000ஐ நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சி.!

கண்டுகொள்ளாத பாஜக!.. கடுப்பில் செங்கோட்டையன்!. தவெகவில் இணைவதன் பின்னணி!...

அடுத்த கட்டுரையில்
Show comments