Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அய்யாக்கண்ணுவுக்கும் அப்சல்குருவுக்கும் தொடர்பு?: எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

அய்யாக்கண்ணுவுக்கும் அப்சல்குருவுக்கும் தொடர்பு?: எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

Webdunia
ஞாயிறு, 30 ஏப்ரல் 2017 (15:25 IST)
தமிழக விவசாயிகளுக்காக டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி இந்தியாவையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணுவுக்கும் அப்சல்குரு குழுவுக்கும் என்ன தொடர்பு என்பதை விசாரிக்க வேண்டும் என எச்.ராஜா கூறியுள்ளார்.


 
 
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அடிக்கடி சர்ச்சைக்குறிய வகையில் கருத்து கூறி சர்ச்சையில் சிக்கிக்கொள்வார். சில வாரங்களுக்கு முன்னர் டெல்லியில் போராட்டம் நடத்திய அய்யாக்கண்ணுவை பிராடு என கூறி விமர்சித்தார் எச்.ராஜா. மேலும் அய்யக்கண்ணு என் வீட்டில் வந்து கிடப்பார், ஆடி கார் வைத்திருக்கிறார் என பேசினார் எச்.ராஜா.
 
இதற்கு பதிலடி கொடுத்து அய்யாக்கண்ணு ஆடியோ ஒன்றையும் வெளியிட்டார். இந்நிலையில் மீண்டும் எச்.ராஜா அய்யக்கண்ணுவை சீண்டும் விதமாக தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.
 
அப்போது பேசிய அவர், தமிழகம் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் புகழிடமாக இருந்து கொண்டிருக்கிறது. அதனால் அய்யாக்கண்ணுவுக்கும் அப்சல்குரு குழுவுக்கும் என்ன தொடர்பு என்பதை தமிழக முதலமைச்சர் உடனடியாக விசாரிக்க வேண்டும். தேவை ஏற்பட்டால் அய்யாக்கண்ணுவை கைது செய்து விசாரிக்க வேண்டிய முறையில் விசாரிக்க வேண்டும் என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கனவில் வந்த மு.க.ஸ்டாலின்..? வடபழனியில் திருஷ்டி கழித்த கூல் சுரேஷ்! - முதல்வருக்காக பாதயாத்திரை செல்ல திட்டம்!

மக்கள் விரும்பும் முதலமைச்சர் வேட்பாளர் விஜய்.. ஈபிஎஸ் அழைப்பை நிராகரித்த தவெக..!

குரூப் 4 தேர்வை ரத்து செய்ய வேண்டும்: ஈபிஎஸ் கோரிக்கையால் அதிர்ச்சியில் பாஸ் ஆனவர்கள்..!

பாஜக கொடுத்த அழுத்தம் காரணமா? ஜெகதீப் தன்கர் திடீர் ராஜினாமா! - காங்கிரஸ் பிரமுகர் ஜெய்ராம் ரமேஷ் சந்தேகம்!

ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் அம்பானி மோசடியாளரா? CBIயிடம் பகீர் புகாரளித்த SBI வங்கி!

அடுத்த கட்டுரையில்
Show comments