Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வு விலக்கு மசோதா...உறுதியளித்த ஆளுநர்!

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2022 (15:48 IST)
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று தமிழக முதல்வர் மு.க .ஸ்டாலின் சந்தித்துள்ள நிலையில் நீட் விலக்கு மசோதாவை குடியரசுத்தலைவருக்கு அனுப்ப  ஆளுநர் உறுதியளித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக அரசு தாக்கல் செய்த நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார். இதனை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் சட்டமன்ற சிறப்பு கூட்டம் கூடி நீட் விலக்கு மசோதாவை இயற்றி ஆளுநருக்கு அனுப்பி உள்ளது.

இந்த மசோதாவிற்கு ஆளுநரின் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த நிலையில் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வலியுறுத்தி இந்த சந்திப்பு நடக்கும் என்றும் கூறப்பட்டது.

அதேபோல் இந்தச் சந்திப்பில்,  நீட் விலக்கு   மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதாக முதல்வர் ஸ்டாலினிடம் ஆளுநர் ரவி உறுதியளித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உண்ணாவிரத போராட்டத்தை முடித்து கொள்ளுங்கள்: சசிகாந்துக்கு ராகுல் காந்தி அறிவுரை..!

இந்திய தாயின் வீரம் நிறைந்த மகன்.. பூலித்தேவர் குறித்து ஆளுனர் ரவி பெருமிதம்..!

இந்தியா, ரஷ்யா இருதரப்பு பேச்சுவார்த்தை.. ஒரே காரில் சென்ற மோடி - புதின்..!

பாகிஸ்தான் பிரதமர் பகல்காம் தீவிரவாத தாக்குதலை பிரதமர் மோடி.. சீனாவில் பரபரப்பு..!

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 622 பேர் உயிரிழப்பு; 1,500 பேர் படுகாயம்

அடுத்த கட்டுரையில்
Show comments