Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவுடன் மீண்டும் நாளை பேச்சுவார்த்தை: இ.யூ.மு.லீக் கட்சி அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 28 பிப்ரவரி 2021 (19:32 IST)
திமுக கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றாக தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது 
 
இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் இந்திய யூனியன் முஸ்லிம் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் அவர்கள் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தொகுதி பங்கீடு குறித்து நாளை முடிவு அறிவிக்கப்படும் என்றும் கூறினார்
 
மேலும் கடந்த தேர்தலில் எங்களுக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டது என்பதால் அதனை கணக்கில் கொண்டே இந்தத் தேர்தலிலும் நாங்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தொகுதியை கேட்டுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு திமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments