Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனித்து போட்டி என்பது அண்ணாமலையின் சொந்த கருத்து: நயினார் நாகேந்திரன்

Webdunia
சனி, 18 மார்ச் 2023 (12:23 IST)
தனித்து போட்டியிடுவது என்பது அண்ணாமலையின் சொந்த கருத்து என பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சற்றுமுன் பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்றும் அதிமுகவுடன் கூட்டணி என்ற முடிவு எடுக்கப்பட்டால் தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஒரு தொண்டனாக கட்சியில் பணியாற்றுவேன் என்றும் தெரிவித்திருந்தார்
 
இந்த நிலையில் தேர்தல் கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியது அவரது தனிப்பட்ட கருத்து என்றும் தேர்தல் கூட்டணி குறித்து பாஜகவின் அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும் என்றும் பாஜக துணை தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். 

மேலும் தமிழகத்தில் இதுவரை எந்த கட்சியும் தனித்து போட்டியிட்டது இல்லை என்றும் தனித்து போட்டியிடுவதாக அறிவிக்கவும் முடியாது என்றும் அவர் தெரிவித்தார். பாஜக தனித்து போட்டியிட வேண்டும் என அண்ணாமலை கூறிய நிலையில் தனித்து போட்டி இல்லை என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் 3 நாட்களுக்கு செம மழை! எந்தெந்த பகுதிகளில்..? - வானிலை ஆய்வு மையம்!

50 ஆண்டுகளுக்கு பிறகு சீரமைக்கப்பட்ட வள்ளி குகை.. திருச்செந்தூர் பக்தர்கள் மகிழ்ச்சி..!

ஊட்டியில் இன்றும் நாளையும் சுற்றுலா தலங்கள் மூடல்.. என்ன காரணம்?

9 கிலோ சங்கிலி அணிந்து எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்த நபர்.. காந்தத்தால் இழுத்து பரிதாப பலி..!

லிவ் -இன் உறவில் வாழ்ந்து வந்த பெண் உதவி காவல் ஆய்வாளர் கொலை.. CRPF வீரர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments