Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் கட்சியை அழிக்கும் நடவடிக்கையில் மோடி ஈடுபட்டு வருகிறார்: இளங்கோவன்

Webdunia
சனி, 19 டிசம்பர் 2015 (13:15 IST)
காங்கிரஸ் கட்சியை அழிக்கும் நடவடிக்கையில் நரேந்திர மோடி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.


 

 
சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது போடப்பட்ட நேசனல் ஹெரால்டு பத்திரிக்கை தொடர்பான பொய்யான வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என்று கூறி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 
இந்த ஆர்ப்பாட்டத்தை தலைமை தாங்கி நடத்திய மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூட்டத்தில் பேசுகையில், "பிரதமர் நரேந்திர மோடியின் தொடர் பழிவாங்கும் நடவடிக்கைகளால், காங்கிரஸ் கட்சி ஆபத்தில் உள்ளது.
 
நரேந்திர மோடி பலநாட்கள் வெளிநாட்டில்தான் உள்ளார். சில நாட்கள் மட்டுமே இந்தியாவில் இருக்கிறார்.
 
இந்தியாவில் இருக்கும் அந்த சில நாட்களிலும் மக்கள் நலப்பணி குறித்து சிந்திக்காமல், காங்கிரஸ் கட்சியை அழிக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
 
அரசியலை மூலதனமாக கொண்டு சம்பாதித்தவர்களுக்கு மத்தியில், நாட்டிற்காக தமது சொத்துக்களையே இழந்தவர்கள் நேரு குடும்பத்தினர்.
 
அத்தகைய நேரு குடும்பத்தை சேர்ந்தவர்களை பற்றி பேச நரேந்திர மோடிக்கு தகுதி இல்லை" என்று இளங்கோவன் கூறினார்.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments