தமிழகத்தில் நேற்று வாக்குபதிவி அமைதியாக நடைபெற்றது. மொத்தம் 74 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதிமுக சார்பில் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டார். இவர் வாக்கு பதிவு முடிவடைய இருந்த நேரத்தில் தனது வாக்கினை அளிக்க வாக்கு சாவடிக்கு வந்தார். அப்போது வாக்கு எந்திரம் அருகே சென்ற அவர் அதனை தொட்டு வணங்கிவிட்டு தனது வாக்கினை பதிவு செய்தார்.