Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடராஜனின் உடல் நிலை பாதிப்பு - அப்போலோவில் தீவிர சிகிச்சை

Webdunia
திங்கள், 17 ஏப்ரல் 2017 (11:20 IST)
சசிகலாவின் கணவர் நடராஜனின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


 

 
சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார் நடராஜன்.  உடல் சோர்வு, அசதி காரணமாக அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அப்போலோ மருத்துவமனைக்கு சென்றார். மருத்துவர்கள் அவரை சோதித்து முதல்  கட்ட சிகிச்சை அளித்தனர். மேலும், மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெறும் படி மருத்துவர்கள் கூற, நடரஜான் அங்கேயே தங்கியிருந்தார். விரைவில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது.
 
இந்நிலையில், சசிகலாவின் அண்னன் மகன் மகாதேவன், சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். இது கேள்விப்பட்டு நடராஜன் மிகுந்த சோகத்தில் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் அவரின் உடல்நிலை மிகவும் மோசமானது. 
 
மருத்துவர்கள் செய்த சோதனையில் அவரது உடலில் உள்ள கல்லீரல் மிககும் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. எனவே, விரைவில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
உடல் நிலை பாதிப்பு காரணமாகவே, மகாதேவனின் இறுதிச் சடங்கில் கூட அவர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments