Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவை புறக்கணிக்கும் மோடி!

Webdunia
திங்கள், 12 பிப்ரவரி 2018 (14:14 IST)
ஜெ. உருவப்பட திறப்பு விழாவுக்கு எடப்பாடி அரசு விடுத்த அழைப்பை மோடி புறக்கணித்துள்ளார்.

 
தமிழக சட்டமன்றத்தில் இன்று காலை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை சபாநாயகர் திறந்து வைத்தார். எடப்பாடி தலைமையில் ஓராண்டு நிறைவு தினமான 16ஆம் தேதியன்று ஜெயலலிதா உருவப்படம் திறக்க திட்டமிடப்பட்டு இருந்தது.
 
இந்த விழாவிற்கு மோடிக்கு அழைப்பு சென்றுள்ளது. ஆளும் அரசு மீது ஆளுநர் ஏற்கனவே ஊழல் பட்டியலை அனுப்பி வைத்துள்ளார். இதன் காரணமாக மோடி விழாவிற்கு வர மறுத்துள்ளார். ஆளுநர், எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் வழக்கின் தீர்ப்பு வரட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
 
ஜெயலலிதா உருவப்படம் திறக்கப்படுவதற்கு எதிராக திமுக சார்ப்பில் வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நீதிமன்றத்தில் தடை பெற்றுவிடுவார்களோ என்ற பயத்தில் அவசர அவசரமாக இன்று ஜெயலலிதா உருவப்படம் திறக்கப்பட்டுள்ளது.
 
கடந்த சில மாதங்களாக அதிமுவை சேர்ந்தவர்கள் மத்திய அரசு மற்றும் பாஜகவினர் கருத்தை விமர்சனம் செய்து வருகின்றனர். சசிகலா சிறைக்கு சென்றபின் ஓபிஎஸ் - எடப்பாடி இணைந்து தமிழை அரசை ஆட்சி செய்ய தொடங்கிய ஆரம்ப காலத்தில் மோடி ஆதரவு இருந்த காரணத்தால் அதிமுகவினர் மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் தற்போது சில விஷயங்களில் அதிமுகவை சேர்ந்தவர்கள் மத்திய அரசை விமர்சனம் செய்து வருகின்றனர். மோடி கொஞ்சமாக கொஞ்சமாக அதிமுகவை புறக்கணித்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments