Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடிக்கும் ஜெ. மரணத்துக்கும் தொடர்பு உள்ளதா? தங்க தமிழ்ச்செல்வனின் அதிர்ச்சியளிக்கும் பேச்சு

Webdunia
வியாழன், 20 ஏப்ரல் 2017 (17:59 IST)
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என்றால் நீதிவிசாரணை நடத்த வேண்டும். அதில் பிரதமர் மோடியையும் விசாரிக்க வேண்டும் என தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.


 

 
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ்ச்செல்வன் கூறியதாவது:-
 
ஓபிஎஸ் அணியினருக்கு என்ன டிமாண்ட் என்பது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் எங்களுக்கு தேவை ஜெயலலிதா ஆட்சி, எல்லா சட்டமன்ற உறுப்பினர்களும் அதைத்தான் விரும்புகிறார்கள். தினகரன் கட்சியும், ஆட்சியும் நன்றாக இருக்க வேண்டும் என விரும்பி விலகி விட்டார்.
 
சத்தியமாக ஜெயலலிதா மீது ஆணையிட்டு சொல்கிறேன். ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும். 60 நாட்கள் முதல்வராக இருந்த ஓபிஎஸ் விசாரிக்கப்பட வேண்டும். எம்ய்ம்ஸ் மருத்துவர்கள், லண்டன் டாக்டர், சிங்கபூர் டாக்டர் என மருத்துவர்கள் அனைவரும் விசாரிக்கப்பட வேண்டும். 
 
மோடியையும் விசாரணைக்கு கூப்பிடுங்கள். ஜெயலலிதா மரணம் குறித்து ஒரு முடிவு தெரிந்தாக வேண்டும். மர்மம் மர்மம் என்று எத்தனை நாட்களுக்கு சொல்வீர்கள். இது நியாயம் இல்லை என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments