Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலவர நோக்கில் பாஜக: வேல் யாத்திரைக்கு முட்டுகட்டை போட்ட நாராயணசாமி!

Webdunia
புதன், 11 நவம்பர் 2020 (17:47 IST)
புதுச்சேரி மாநிலத்தில் வேல் யாத்திரைக்கு அனுமதி கிடையாது என்று முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு.
 
தமிழக பாஜக தலைவர் எல் முருகன் அவர்கள் நவம்பர் ஆறாம் தேதி முதல் டிசம்பர் ஆறாம் தேதி வரை திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை வேல் யாத்திரை நடத்த திட்டமிட்டிருந்தார். இந்த வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்காத நிலையில் தடையை மீறி அவர் வேல் யாத்திரைக்கு நடத்தி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வேல் யாத்திரைக்கு குறித்த வழக்கில் நீதிமன்றம் பாஜக தலைவருக்கு கண்டனம் தெரிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் வேல் யாத்திரைக்கு அனுமதி கிடையாது என்று முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், கலவரத்தை உருவாக்கும் நோக்கில் பாஜக வேல் யாத்திரை நடத்தி வருகிறது என்றும் நீதிமன்றத்தை மதிக்காமல் பாஜகவினர் நடந்துகொள்வது சரியில்லை என்றும் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆப்கானிஸ்தான் உள்பட 12 நாட்டினர் அமெரிக்காவில் நுழைய தடை.. என்ன காரணம்?

சென்னையில் இன்று 17 மின்சார ரயில்கள் ரத்து: முழு விவரங்கள்..!

நீட் ரிசல்ட் வரும் முன்பே விண்ணப்பிக்கலாம்.. எம்பிபிஎஸ் படிப்புக்கு விண்ணப்பம் தொடக்கம்..!

கிரிக்கெட்டுக்கு இது ஒரு துயரமான நாள்: 11 பேர் பலி குறித்து அனில் கும்ப்ளே வேதனை..!

பாகிஸ்தானுக்கு சென்று போரிலா ஜெயித்துவிட்டீர்கள்.. ஏன் இந்த கொண்டாட்டம்.. ஆர்சிபி ரசிகர்களுக்கு கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments