Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக கட்சியை கலைத்துவிடுவதுதான் அமித்ஷாவுக்கு நல்லது: நாஞ்சில் சம்பத்

Webdunia
செவ்வாய், 28 மே 2019 (21:49 IST)
மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக பெற்ற தோல்வி குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பாஜக எதிர்ப்பு அலை, ஊடகங்களின் எதிர்மறை பிரச்சாரம், ஸ்டாலினின் புயல்வேக உழைப்பு உள்பட பல்வேறு காரணங்களை கூறி வரும் நிலையில் நாஞ்சில் சம்பத் அவர்களும் தனது பாணியில் பாஜக தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
 
பாஜக இனி எப்போதுமே தமிழகத்துக்குள் வர முடியாது என்றும் பாஜகவை  ரத்த வெறிபிடித்த ஓநாய்களின் கூடாரமாக தமிழக மக்கள் கருதுவதாகவும் அவர்களின் அடாவடித்தனத்தை மக்கள் பார்த்து கொண்டிருந்ததால்தான் இவ்வளவு பெரிய தோல்வியை கொடுத்திருப்பதாகவும், மொத்தத்தில் பாஜக என்ற கட்சியை தமிழகத்தில் கலைத்துவிடுவதுதான் அமித்ஷாவுக்கு நல்லது என்றும் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
 
மேலும் அகில இந்திய அளவில் பாஜகவின் வெற்றி என்பது பாசிசத்தின் வெற்றி என்றும், எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பில் ஏற்பட்ட தோல்வியால்தான் பாஜக வெற்றி பெற்றிருப்பதாகவும் பாஜகவின் வெற்றி குறித்து கொண்டாட எதுவும் இல்லை என்றும், இந்த தோல்வியில் இருந்து காங்கிரஸ் பாடம் கற்றுக்கொள்ளும் என்றும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

உத்தர பிரதேசத்தில் புல்டோசர் போல் தமிழகத்தில் வரி வசூல்.. மக்கள் கொந்தளிப்பு..!

தமிழக அரசின் டாஸ்மாக் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்: அமலாக்கத்துறை

திமுக அல்லது அதிமுக பலவீனப்பட்டால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments