Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தை மாதத்தில் திமுகவில் இணைவு: நாஞ்சில் சம்பத் சூசகம்

Webdunia
செவ்வாய், 3 ஜனவரி 2017 (18:15 IST)
அதிமுகவில் இன்னும் நீடிக்கிறீர்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘தை பிறந்தால் வழி பிறக்கும். தை மாதம் வரையில் பொறுத்திருக்க வேண்டும்’ என்று நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.


 

இது குறித்து தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், ”அதிமுகவில் இருந்து தான் இன்னும் விலகவில்லை. கட்சியினரும் தன்னை விலக்கவில்லை.

முதல்வர் மரணத்திற்கு பிறகு மவுனம் காத்து நின்றால், மவுனம் காக்க வேண்டும், அதுவே அவருக்கு செய்ய வேண்டிய அஞ்சலி. எனவே மவுனம் காத்தேன், மேலும், நீடிப்பது குறித்தோ, விலகுவது குறித்தோ நான் முடிவு எடுக்கவில்லை.

சசிகலா அவர்களை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் அவர்களை பார்த்தது இல்லை, பழகியதும் இல்லை, அவரை சந்தித்ததும் இல்லை. சசிகலா தனது தகுதியை நிரூபிக்க வேண்டும்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, போதும் இந்த பொதுவாழ்வு என்ற மனநிலைக்கு தான் வந்ததாகவும், கடந்த 30 ஆண்டுகாலமாக தமிழகத்தில் வலம் வந்துவிட்டேன்” என்றார்.

அதிமுகவில் நீடிப்பது குறித்து கேட்ட போது, ”தை பிறந்தால் வழி பிறக்கும். தை மாதம் வரையில் பொறுத்திருக்க வேண்டும்” என்றார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments