Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் களம் இறங்கும் நாஞ்சில் சம்பத்

Webdunia
சனி, 20 பிப்ரவரி 2016 (12:30 IST)
அதிமுக பொதுக்கூட்டங்களில் நாஞ்சில் சம்பத் பேசுவதற்கு அக்கட்சியின் தலைமை அனுமதி அளித்துள்ளது.
\
 

மதிமுகவிலிருந்து விலகி அதிமுகவில் ஐக்கியமானவர் நாஞ்சில் சம்பத். கட்சியில் இணைந்த சில தினங்களிலேயே அவர் அக்கட்சியின் கொள்கைப்பரப்பு துணை செயலாளராக நியமிக்கப்பட்டார். மேலும் அக்கட்சி பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அவருக்கு இன்னோவா கார் ஒன்றையும் பரிசாக வழங்கினார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நாஞ்சில் சம்பத் அளித்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதிமுகவினர் மட்டுமின்றி பொதுமக்களிடையேயும் அது விமர்சனத்துக்குள்ளானது. இதையடுத்து அவரை கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர், அ.தி.மு.க. பொதுக் கூட்டங்களுக்கு அவர் அழைக்கப்படவில்லை. அவர் பேசுவதாக இருந்த கூட்டங்களும்கூட ரத்து செய்யப் பட்டன.

இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச் கூட்டங்களில் மீண்டும் நாஞ்சில் சம்பத் பேசுவதற்கு அ.தி.மு.க. தலைமை அனுமதி அளித்துள்ளது. வருகிற பிப்ரவரி 24ம் தேதி அன்று ஆவடி மற்றும் 26ம் தேதி தி.நகரிலும் நடைபெ ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக் கூட்டங்களில் நாஞ்சில் சம்பத் பேசுகிறார்.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments