Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் களம் இறங்கும் நாஞ்சில் சம்பத்

மீண்டும் களம் இறங்கும் நாஞ்சில் சம்பத்
, சனி, 20 பிப்ரவரி 2016 (12:30 IST)
அதிமுக பொதுக்கூட்டங்களில் நாஞ்சில் சம்பத் பேசுவதற்கு அக்கட்சியின் தலைமை அனுமதி அளித்துள்ளது.
\
 

மதிமுகவிலிருந்து விலகி அதிமுகவில் ஐக்கியமானவர் நாஞ்சில் சம்பத். கட்சியில் இணைந்த சில தினங்களிலேயே அவர் அக்கட்சியின் கொள்கைப்பரப்பு துணை செயலாளராக நியமிக்கப்பட்டார். மேலும் அக்கட்சி பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அவருக்கு இன்னோவா கார் ஒன்றையும் பரிசாக வழங்கினார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நாஞ்சில் சம்பத் அளித்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதிமுகவினர் மட்டுமின்றி பொதுமக்களிடையேயும் அது விமர்சனத்துக்குள்ளானது. இதையடுத்து அவரை கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர், அ.தி.மு.க. பொதுக் கூட்டங்களுக்கு அவர் அழைக்கப்படவில்லை. அவர் பேசுவதாக இருந்த கூட்டங்களும்கூட ரத்து செய்யப் பட்டன.

இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச் கூட்டங்களில் மீண்டும் நாஞ்சில் சம்பத் பேசுவதற்கு அ.தி.மு.க. தலைமை அனுமதி அளித்துள்ளது. வருகிற பிப்ரவரி 24ம் தேதி அன்று ஆவடி மற்றும் 26ம் தேதி தி.நகரிலும் நடைபெ ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக் கூட்டங்களில் நாஞ்சில் சம்பத் பேசுகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil