Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போத்தீஸ் நிறுவனத்திற்கு சீல்: நகராட்சி நிர்வாகம் அதிரடி

Webdunia
செவ்வாய், 22 ஜனவரி 2019 (17:34 IST)
தமிழகத்தில் சென்னை உள்பட பல நகரங்களில் கிளைகளை கொண்ட போத்தீஸ் நிறுவனம் நாகர்கோவிலிலும் 7 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் இயங்கி வந்தது.

இந்த நிலையில் இந்த கட்டிடம் நகராட்சியின் அனுமதியை மீறி 7 மாடிகள் கட்டியதாக நகராட்சி நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. மேலும் இந்த நிறுவனத்திற்கு சீல் வைக்கவிருப்பதாகவும் தெரிவித்திருந்தது.

நகராட்சி நிர்வாகம் சீல் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றம் சென்ற போத்தீஸ் நிறுவனம் சீல் வைக்க தடை உத்தரவை பெற்றது. ஆனால் இந்த தடை உத்தரவை மதுரை உயர்நீதிமன்ற கிளை நீக்கியது. எனவே எப்போது வேண்டுமானாலும் போத்தீஸ் நிறுவனத்திற்கு சீல் வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்றுமுன்னர் நாகர்கோவில் போத்தீஸ் வணிக வளாகத்திற்கு விதிகளை மீறி கட்டிடம் கட்டியதற்காக நகராட்சி சீல் வைத்தது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. .

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments