Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயணிகள் எண்ணிக்கை குறைவு: நாகை - இலங்கை கப்பல் சேவையில் மீண்டும் சிக்கல்..!

Mahendran
புதன், 21 ஆகஸ்ட் 2024 (10:36 IST)
நாகையிலிருந்து இலங்கைக்கு ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் கப்பல் சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில் பயணிகள் எண்ணிக்கை குறைவு காரணமாக வாரத்திற்கு மூன்று நாளாக மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை  இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கப்பல் சேவை தொடங்கி வைக்கப்பட்ட நிலையில் பருவநிலை மாற்றம், பயணிகள் எண்ணிக்கை குறைவு உள்ளிட்ட காரணங்களால் சில நாட்களில் நிறுத்தப்பட்டது.

இதனை அடுத்து மீண்டும் ஆகஸ்ட் 16ஆம் தேதி நாகை - காங்கேசன்துறை இடையே கப்பல் சேவை தொடங்கிய நிலையில் முதல் நாளில் நாகையிலிருந்து 44 பேர் இலங்கை சென்ற நிலையில் அதில் பின்னர் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது. நேற்று நாகையிலிருந்து காங்கேசன்துறைக்கு வெறும் ஐந்து பேர்கள் மட்டுமே சென்றதாகவும் இலங்கையில் இருந்து நாகைக்கு 14 பேர்கள் மட்டுமே பயணம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக தற்போது தினமும் இயங்கி வரும் நாகை காங்கேசன்துறை இடையிலான கப்பல் சேவை இனி வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் மட்டும் நாகை காங்கேசன்துறை இடையிலான கப்பல் சேவை இருக்கும் என்றும் அடுத்த மாதம் 15 ஆம் தேதி வரை இந்த நடைமுறை தொடரும் என்றும் பயணிகள் வருகையை பொருத்து தினமும் கப்பல் சேவை இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கப்பலை இயக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேஜர் தாக்குதலுக்கு இஸ்ரேலுக்கு தண்டனை கொடுப்போம்! - ஹிஸ்புல்லா தலைவர் சபதம்!

2 சிறுவர்கள் கொடூர கொலை.. நரபலி கொடுக்க முயற்சியா? - குடியாத்தம் அருகே அதிர்ச்சி சம்பவம்!

இலங்கையில் நாளை அதிபர் தேர்தல்: மும்முனை போட்டியில் வெற்றி பெறுவது யார்?

பராமரிப்பு பணி எதிரொலி: திருச்சி வழியாக செல்லும் ரெயில் சேவையில் மாற்றம்

இந்தியா - வங்கதேச கிரிக்கெட் தொடரை தடை செய்ய வேண்டும்: இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

அடுத்த கட்டுரையில்
Show comments