Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாம் தமிழர் கட்சி அனைத்து உயிர்களுக்குமானது – நெகிழச்செய்யும் புகைப்படம் !

Webdunia
வெள்ளி, 7 ஜூன் 2019 (11:12 IST)
நாம் தமிழர் கட்சி சார்பில் கால்நடைகளுக்காக வைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகள் குறித்து சமூக வலைதளங்களில் பாராட்டு மழைகள் குவிந்து வருகின்றன.

சென்னைப் போன்ற பெருநகரங்களில் மக்களுக்கேக் குடிக்க இலவசமாக குடிநீர் கிடைப்பது சிரமமாக உள்ளது. கோடைக்காலங்களில் அரசியல் கட்சிகள் வைக்கும் தண்ணீர் பந்தல்களே ஒரே ஆறுதல். மனிதர்களுக்கே இந்த நிலைமை என்றால் கால்நடைகளுக்கு சொல்ல வேண்டுமா?

ஆனால் கால்நடைகளின் தாகத்தை தீர்க்க நாம் தமிழர் கட்சியினர் ஒரு சிறப்பான ஏற்பாட்டை செய்துள்ளனர்.  நகரங்களின் சில பகுதிகளில் கால்நடைகள் குடிக்கும் வண்ணம் தண்ணீர் தொட்டிகளை வைத்துள்ளனர். அதில் நாம் தமிழர் கட்சி அனைத்து உயிர்களுக்குமானது என எழுதப்பட்டுள்ளது. அதில் கால்நடைகள் வந்து தண்ணீர் குடித்து தாகம் தீர்க்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளன.

அடையாள தண்ணீர் பந்தலாக இல்லாமல் இது  நிரந்தரமாக தொடரவேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியின் இந்த முன்னெடுப்பு முக்கியமானது என பலரும் தங்கள் கருத்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments