என் தேசத்தை நாசமாக்கிய ஒரே செயல் இலவசம்: சீமான் ஆவேசம்

Webdunia
வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (17:15 IST)
என் தேசத்தை நாசமாக்கிய ஒரே செயல் இலவசம் தான் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில நாட்களாக இலவசங்கள் குறித்த வாதங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இலவச அறிவிப்புகளை தேர்தல் அறிக்கைகளில் வெளியிடக்கூடாது என பாஜக வலியுறுத்தி வரும் நிலையில் திமுக உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன
 
குறிப்பாக தமிழக நிதியமைச்சர் பழனிவேல்ராஜன் இலவசத்திற்கு ஆதரவு அளித்து வருகிறார். இந்த நிலையில் இது குறித்து சீமான் கூறியபோது இலவசங்களால் என் தேசம் நாசமாய் போனது என்றும் அத்தியாவசிய பொருள்களை கூட வாங்க முடியாத அளவுக்கு மக்களை வைத்ததுதான் இந்த இலவசத்தின் கொடுமை என்றும் தெரிவித்துள்ளார் 
 
மேலும் இலவசமாக கொடுக்கும் பொருள்கள் வாங்கும் பணம் எங்கிருந்து வந்தது என்றும் அதுவும் மக்களிடமிருந்து பெற்றதுதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. தமிழக அரசு மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments