Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் என்.ஐ.ஏ முன் ஆஜர்.. தீவிர விசாரணை என தகவல்..!

Mahendran
வியாழன், 8 பிப்ரவரி 2024 (12:29 IST)
சீமானின் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்த நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் என்.ஐ.ஏ அதிகாரிகள் முன் இன்று ஆஜராகி உள்ளனர். இந்த நிலையில் அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது

சென்னை, புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ  அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கார்த்திக் மற்றும் விஷ்ணு ஆகியோர் என்.ஐ.ஏ விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்த விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள் அடிப்படையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடம் விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்றைய விசாரணைக்கு பின்னரே என்.ஐ.ஏ அதிகாரிகளின் நடத்தப்பட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்றும் தெரியவரும்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments