Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அண்ணன் ஆ.ராசாவை தாக்கினால் அமைதியாக வேடிக்கைப் பார்க்க மாட்டோம்: சீமான்

seeman
, ஞாயிறு, 18 செப்டம்பர் 2022 (15:05 IST)
அண்ணன் ஆ ராசா மீது தாக்குதல் தொடுத்தால் வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம் என நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சமீபத்தில் இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை ஆ. ராசா தெரிவித்ததாக பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மனுதர்மத்தை சாடியதற்காக ஆராசாவை குறிவைத்து மதவாதிகளின் தாக்குதல் தொடுத்தால் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம் என நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார்
 
ஆரிய சனாதன கோட்பாடுகளுக்கு எதிராக அண்ணன் ஆ ராசாவின் கருத்துக்களை முழுமையாக ஆதரித்து என்றைக்கும் துணை நிற்போம் என்பதையும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார் 
 
ஆ ராசாவின் கருத்துக்களுக்கு திமுகவின் முன்னணித் தலைவர்களேஎ இன்னும் ஆதரவு தெரிவிக்காத நிலையில் நாம் தமிழர் கட்சியின் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை: தமிழகத்திற்கு வானிலை எச்சரிக்கை