ஏய் தமிழிசை, மோடி எங்கே இருக்கிறார் சொல்?: மர்ம நபர் மிரட்டல்!
ஏய் தமிழிசை, மோடி எங்கே இருக்கிறார் சொல்?: மர்ம நபர் மிரட்டல்!
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு மர்ம நபர் ஒருவர் தொலைப்பேசியில் மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தமிழிசையின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழிசை சௌந்தர்ராஜனின் செல்போனுக்கு நேற்று மர்ம நபர் ஒருவர் அழைப்பு விடுத்து, ஏய் தமிழிசை, மோடி எங்கே இருக்கிறார் சொல்? என மிரட்டும் வைகையில் பேசியிருக்கிறார். இதனையடுத்து அவர் தனது வழக்கறிஞரை தொடர்புகொண்டு மர்ம நபர் பேசியது குறித்து தெரிவித்துள்ளார்.
பின்னர் சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் மர்ம நபரின் மிரட்டல் குறித்து தமிழிசை சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழிசையின் வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் அவரது வீட்டின் அருகே ரோந்து வாகனமும் போடப்பட்டுள்ளது.
மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடைக்கு ஆதரவாக தமிழிசை பேசி வருவதால் இந்த மிரட்டல் வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.