Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் நிலையத்தில் மேலும் ஒரு பயங்கரம்: கல்லூரி மாணவரை வெட்டிய மர்ம கும்பல்!

ரயில் நிலையத்தில் மேலும் ஒரு பயங்கரம்: கல்லூரி மாணவரை வெட்டிய மர்ம கும்பல்!

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2016 (16:23 IST)
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சென்னை கோட்டூர்புரம் ரயில் நிலையத்தில் மேலும் ஓர் அசம்பாவிதம் நடந்துள்ளது.


 
 
கோட்டூர்புரம் ரயில் நிலையத்தில் வாலிபர் ஒருவர் தனது தோழியுடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்திருக்கிறார். இந்நிலையில் அங்கு கத்தியுடன் நுழைந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் அந்த பெண்ணை மிரட்டி விரட்டியுள்ளனர்.
 
பின்னர் அந்த வாலிபரை தாங்கள் கொண்டு வந்த கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். படுகாயமடைந்த வாலிபர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
 
இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வாலிபரை வெட்டிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். வெட்டப்பட்ட வாலிபர் கல்லூரி மாணவன் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து..! 7 பச்சிளம் குழந்தைகள் பலி..!!

10 வயது சிறுவனை கொலை செய்த 13 வயது சிறுவன்.. மதுரையில் பயங்கர சம்பவம்..!

பர்னிச்சருக்குள் கோடி கோடியாய் பணம்.. தொழிலதிபர் வீட்டில் ஐடி ரெய்டில் அதிர்ச்சி..!

வங்கக்கடலில் ரீமால் புயல்.. 21 மணி நேரத்திற்கு விமான சேவை நிறுத்திவைப்பு

வங்கக் கடலில் 'ரீமால்' புயல் எதிரொலி: தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments