Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபா அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

Webdunia
செவ்வாய், 26 டிசம்பர் 2017 (11:24 IST)
ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபாவின் கட்சி அலுவலகத்தில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர், அவரின் இறப்பில் மர்மம் இருப்பதால், அவரது மருத்துவமனை சிகிச்சை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று முதலில் கூறியவர் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா தான். இதனையடுத்து சென்னை திநகரில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை அவர் உருவாக்கினார். தீபா அவர்கள் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நினைத்தார். ஆனால் தேர்தல் ஆணையத்தால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றியடைந்ததை அடுத்து நேற்று நள்ளிரவு 3 ஆட்டோக்களில் வந்த 15 பேர் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை அலுவலகத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். அங்கிருந்த காவலாளியையும் தாக்கியுள்ளனர். தீபா சார்பில் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தீபா சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரின் தூண்டுதலின் பேரில்தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நல்ல மார்க் எடுக்கல.. விரும்பிய பாடம் கிடைக்கல! – விரக்தியில் 10ம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு!

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..! சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை.! எந்தெந்த இடங்கள் தெரியுமா.?

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments