Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுய ஊரடங்கு உத்தரவிலும் வெளுத்து வாங்கும் மட்டன் வியாபாரம்!

Webdunia
ஞாயிறு, 22 மார்ச் 2020 (10:00 IST)
வெளுத்து வாங்கும் மட்டன் வியாபாரம்
கொரோனா வைரஸ் பாதுகாப்பை முன்னிட்டு நாடு முழுவதும் மக்கள் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வரும் நிலையில் சுய ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மட்டன் கடைகளில் கூட்டம் அலைமோதியதாக செய்திகள் வெளிவந்துள்ளது,
 
பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டன் கடைகளில் வியாபாரம் ஜோராக இருக்கும். அதிலும் இன்று சுய ஊரடங்கு உத்தரவு என்பதால் அனைவரும் மட்டன் எடுத்து சாப்பிட முடிவு செய்து காலை முதல் மட்டன் கடைகளில் குவிந்து வருகின்றனர். கோழிக்கறி சாப்பிட்டால் கொரோனா பரவும் என்ற வதந்தி காரணமாக மட்டன் வியாபாரம் மட்டுமே அமோகமாக நடந்து வருகிறது.
 
இந்த நிலையில் காலை 7 மணிக்கு மேலும் மட்டன் கடைகளில் கூட்டம் அதிகமானதை அடுத்து போலீசார் அந்த கடைகளை மூட உத்தரவிட்டதால் வேறு வழியின்றி மட்டன் கடைக்காரர்கள் கடைகளை மூடி வருகின்றனர்.
 
மேலும் இன்று சுய ஊரடங்கு உத்தரவு என்பதால் நேற்று மாலையே காய்கறி, மளிகைப்பொருட்களை மக்கள் மொத்தமாக வாங்கி வைத்ததால் நேற்று நள்ளிரவு வரை மளிகை, காய்கறி கடைகளில் அமோகமாக வியாபாரம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments