Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக வாயில் சிக்கிக் கொண்ட அதிமுக! – முத்தரசன் காரச்சார கருத்து!

Webdunia
சனி, 15 ஆகஸ்ட் 2020 (11:14 IST)
அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து சமீப காலமாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ள நிலையில், அதை மோடிதான் முடிவு செய்வார் என முத்தரசன் கூறியுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம் எழுந்தது. இதுகுறித்து பொதுவெளியில் அதிமுக அமைச்சர்கள் சிலர் ஆளுக்கொரு கருத்து கூறியதால் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்கள் எழ தொடங்கியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து அதிமுக தலைமையே முடிவு செய்யும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த குளறுபடிகள் குறித்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் “அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அதிமுகவினராலேயே சொல்ல முடியாது. அதை பிரதமர் மோடிதான் முடிவு செய்வார். பாம்பின் வாயில் சிக்கி கொண்ட தவளை போல, பாஜகவிடம் அதிமுக சிக்கிக் கொண்டுள்ளது. பாஜக தன்னை பலப்படுத்திக் கொள்ள திமுக உள்ளிட்ட கட்சிகளை பலவீனப்படுத்த முயற்சித்து வருகிறது” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments