Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக வாயில் சிக்கிக் கொண்ட அதிமுக! – முத்தரசன் காரச்சார கருத்து!

Webdunia
சனி, 15 ஆகஸ்ட் 2020 (11:14 IST)
அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து சமீப காலமாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ள நிலையில், அதை மோடிதான் முடிவு செய்வார் என முத்தரசன் கூறியுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம் எழுந்தது. இதுகுறித்து பொதுவெளியில் அதிமுக அமைச்சர்கள் சிலர் ஆளுக்கொரு கருத்து கூறியதால் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்கள் எழ தொடங்கியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து அதிமுக தலைமையே முடிவு செய்யும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த குளறுபடிகள் குறித்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் “அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அதிமுகவினராலேயே சொல்ல முடியாது. அதை பிரதமர் மோடிதான் முடிவு செய்வார். பாம்பின் வாயில் சிக்கி கொண்ட தவளை போல, பாஜகவிடம் அதிமுக சிக்கிக் கொண்டுள்ளது. பாஜக தன்னை பலப்படுத்திக் கொள்ள திமுக உள்ளிட்ட கட்சிகளை பலவீனப்படுத்த முயற்சித்து வருகிறது” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments