Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இஸ்லாமிய முதியவர் அடித்து கொல்லப்பட்தை கண்டித்து சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்

இஸ்லாமிய முதியவர் அடித்து கொல்லப்பட்தை கண்டித்து சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்
, சனி, 3 அக்டோபர் 2015 (18:07 IST)
உத்திர பிரதேசத்தில் இஸ்லாமிய முதியவர் அடித்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் தமிழ்நாடு தவுகீத் ஜமாத் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உத்திர பிரதேசத்தில் இஸ்லாமிய முதியவர் மாட்டு இறைச்சி வைத்திருப்பதாக கோரி மர்ம நபர்கள் அடித்து கொலை செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் மவுனம் காத்துவருகிறது..

இந்த சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு தவுகீத் ஜமாத் அமைப்பினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில்  ஈடுப்பட்டனர்.
 
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இஸ்லாமிய பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். உத்திரபிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். 
 

Share this Story:

Follow Webdunia tamil