Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இசைக் கருவியில் ரூ. 48 லட்சம் கடத்திய கேரளா வாலிபர் கைது

இசைக் கருவியில் ரூ. 48 லட்சம் கடத்திய கேரளா வாலிபர் கைது
, செவ்வாய், 13 அக்டோபர் 2015 (00:57 IST)
துபாயில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில், சென்னைக்கு இசைக் கருவியில் தங்கம் கடத்தி வந்த கேரள வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
 
துபாயில் இருந்து ஏர் இந்தியா விமானம் சென்னை வந்தது. அந்த விமானத்தில், கேரளாவைச் சேர்ந்த தமின் அன்சாரி என்ற வாலிபர் வந்தார். மற்றவர்களிடம் சோதனை நடத்துவது போல், அவரிடமும் போலீசார் சோதனை நடத்தினர்.
 
அப்போது, அவர் வைத்திருந்த இசை கருவியில், தங்கத்தை அவர் கடத்தி வந்தது தெரிய வந்தது. அவரை உடனே கைது செய்து, தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 48 லட்சம் ஆகும். 

Share this Story:

Follow Webdunia tamil