Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலூர் சிறையில் முருகன், நளினி ஆகியோரின் உண்ணாவிரதம் வாபஸ்!

Webdunia
வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (22:06 IST)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க பல்வேறு அமைப்புகள் போராடி வரும் நிலையில் 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி முருகன், நளினி ஆகிய இருவரும் கடந்த சில நாட்களாக சிறையில் உண்ணாவிரதம் இருந்தனர்.

முருகன் கடந்த 12 நாட்களாகவும், நளினி 7 நாட்களாகவும் உண்ணாவிரதம் இருந்த நிலையில் தற்போது இருவரும் தங்களது உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றனர். சிறைத்துறை அதிகாரிகளின் உறுதிமொழியை ஏற்று உண்ணாவிரத போராட்டத்தை நளினி, முருகன் ஆகிய இருவரும் வாபஸ் பெற்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் ராஜீவ் கொலையாளிகள் 7 பேர்களை தேர்தல் அறிவிப்புக்கு முன் விடுதலை செய்ய வேண்டும் என்றும், தமிழக கவர்னருக்கு இதுகுறித்து தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசியல் கட்சிகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறந்து போன தாய்.. வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம்! ஒரே நாளில் உலக பணக்காரன் ஆன நொய்டா இளைஞர்!

திருப்பதியில் AI தொழில்நுட்பம்.. பக்தர்களின் தரிசன நேரம் குறையுமா? முன்னாள் அதிகாரிகள் சந்தேகம்!

உண்மையான இந்தியர் யார் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம்: பிரியங்கா காந்தி காட்டம்..!

தமிழக மாணவனை கட்டாயப்படுத்தி போருக்கு அனுப்பிய ரஷ்யா? - நடவடிக்கை எடுக்குமா இந்திய அரசு?

நான் இருக்கும் வரை வட இந்தியர்களை ஓட்டுப்போட விட மாட்டேன்! - சீமான் உறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments