Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினமும் தலைப்புச் செய்தியாகும் கொலைகள்.! பின்னோக்கி செல்லும் சட்டம் ஒழுங்கு - இ.பி.எஸ். கண்டனம்.!

Senthil Velan
திங்கள், 9 செப்டம்பர் 2024 (15:50 IST)
விடியா திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதலே சீரழியும் சட்டம் ஒழுங்கை இனியாவது பேணிக் காக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
 
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 6 பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது என்று கூறியுள்ளார்.
 
தினமும் தலைப்புச் செய்திகளை அலங்கரிக்கும் அளவிற்கு கொலைகளை மிக இயல்பாக்கியதே இந்த விடியா திமுக அரசின் மூன்றாண்டு சாதனை என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
வெளிநாட்டில் அமர்ந்தவாரே கோப்புகளில் கையெழுத்து இடுவது போல் போட்டோஷூட் நடத்திய விடியா திமுக முதல்வர், தனது கட்டுப்பாட்டில் உள்ள சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்று ஒருமுறையாவது கேட்டறிந்தாரா? என்று எடப்பாடி கேள்வி எழுப்பி உள்ளார்.
 
தனது பிரதானப் பணிகளையே மறந்துவிட்டு, வாக்களித்த மக்களின் பாதுகாப்பு குறித்து எந்த அக்கறையும் இன்றி, தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை கடந்த மூன்று ஆண்டுகளாக பின்நோக்கி தள்ளிக் கொண்டிருக்கும் விடியா திமுக முதல்வருக்கு எனது கடும் கண்டனம் என்று அவர் தெரிவித்துள்ளார்.


ALSO READ: குரங்கு அம்மை தொற்று பாதிப்பு.! மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்..!
 
விடியா திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதலே சீரழியும் சட்டம் ஒழுங்கை இனியாவது பேணிக் காக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன் என்று எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் யாருக்கும் குரங்கம்மை தொற்று இல்லை: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

குரங்கு அம்மை தொற்று பாதிப்பு.! மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்..!

உலக அளவில் போதைப்பொருள் கடத்தல் மையமாக மாறிய தமிழ்நாடு: அன்புமணி

நெல்லை அருகே 3 வயது சிறுவன் கொலை.! பெண் கைது - திடுக்கிடும் வாக்குமூலம்.!!

வந்தே பாரத் ரயிலை இழுத்துச் சென்ற சரக்கு ரயில் எஞ்சின்! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments