Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருமணமான 15 நாட்களில் கள்ளக்காதலியால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட எஸ்.ஐ.: பரபரப்பு வாக்குமூலம்

திருமணமான 15 நாட்களில் கள்ளக்காதலியால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட எஸ்.ஐ.: பரபரப்பு வாக்குமூலம்
, புதன், 23 ஜூலை 2014 (12:56 IST)
சிதம்பரத்தில் காவல்துறை துணை ஆய்வாளராக இருந்த கள்ளக்காதலன் திருமணம் செய்தது பிடிக்காமல் அவரது கள்ளக்காதலி வெட்டிக் கொலை செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
 
சிதம்பரம் அண்ணாமலைநகர் காவல் நிலைய துணை ஆய்வாளராக இருந்தவர் கணேசன் (வயது 31). இவரது சொந்த ஊர் பண்ருட்டி .இவர் சிதம்பரம் சக்ராஅவென்யூ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்தார். இவருக்கு கடந்த 9 ஆம் தேதி தான் திருமணம் நடந்து உள்ளது. இவரது மனைவி சத்யா.கணேசன் ஆடிமாதம் காரணமாக மனைவியை அவரது அம்மா வீட்டிற்கு அனுப்பி இருந்தார்.
 
நேற்று இரவு கணேசனின் மனைவி சத்யா கணேசனுக்கு போன் செய்து பார்த்தார் அவர் எடுக்கவில்லை இதனால் சத்யா சிதம்பரத்தில் உள்ள கணேசனின் உறவினர் மணிகண்டனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் கணேசன் வீட்டுக்கு வந்து பார்த்தார். வீடு வெளிபக்கமாக பூட்டப்படு இருந்தது.மணிகண்டன்  ஜன்னலை திறந்து அவர் எட்டி பார்த்தபோது  கணேசன் கட்டிலில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தது தெரிய வந்தது. இதுபற்றி அவர் சிதம்பரம் அண்ணாமலைநகர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். காவல்துறையினர் விரைந்து வந்துபிணத்தை கைப்பற்றி அவர்கள் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது ஒரு பெண் அந்த வீட்டில் தங்கி இருந்ததாக தகவல் தெரிந்தது. அவர் கணேசனுடைய கள்ளக்காதலி வனிதா என்பதை தெரிந்து கொண்ட காவல்துறையினர் அவரை தேடினார்கள். இந்த நிலையில் விருத்தாலசத்தில் காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது சேலம் செல்லும் பேருந்தில் கள்ளக்காதலி வனிதா ஏறி அமர்ந்து இருந்ததை கண்டுபிடித்தனர். அவரை அழைத்து சென்று விசாரித்த போது நான்தான் கணேசனை கொலை செய்தேன் என்று கூறினார்.
 
விசாரணையில் சிதம்பரம் கிள்ளை குப்பத்தை சேர்ந்த கலைமணி என்பவருடைய மனைவி வனிதாவுக்கும்(வயது 25) விழுப்புரத்தை சேர்ந்த மினி பேருந்து டிரைவர் ஒருவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது. ஒருசமயம் கள்ளகாதலர்கள் காவல்துறையில் மாட்டி கொண்டனர் அப்போது அந்த காவல் நிலையத்தில் துணை ஆய்வாளராக இருந்த கணேசனுக்கும் வனிதாவுக்கும் தொடர்பு ஏற்பட்டது.
 
அடிக்கடி இருவரும் கணேசனின் குடியிருப்பு வீட்டில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர். இந்த நிலையில் கணேசனுக்கு திருமணமானது வனிதாவுக்கு பிடிக்கவில்லை.
 
நேற்று மாலை வனிதா கணேசனை சந்திப்பதற்காக அவர் தங்கி இருந்த குடியிருப்புக்கு வந்து இருந்தார். இரவு இருவரும் சாப்பிட்டு விட்டு உல்லாசமாக இருந்தனர். 
 
கணேசன் மது குடித்துவிட்டு அயர்ந்து படுத்து தூங்கினார். அப்போது வனிதா கணேசனை சரமாரியாக வெட்டினார். இதில் அந்த இடத்திலேயே கணேசன் ரத்த வெள்ளத்தில் பிணமானார். அதைத்தொடர்ந்து வனிதா வீட்டை வெளியே பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
 
கணேசனை கொன்றதாக கள்ளக்காதலி வனிதா கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நான் மட்டும்தான் கொலை செய்தேன் என்று கூறியுள்ளார்.ஆனால் வனிதா கூலிப்படை யாரையாவது காரில் அழைத்து வந்து கொலை செய்திருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகிக்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil