Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"கஷ்டப்படுவான் என்பதால் அவனையும் அழைத்துச் செல்கிறேன்" - மகனை ஏரியில் வீசிக் கொன்று தாயும் தற்கொலை

Webdunia
திங்கள், 24 நவம்பர் 2014 (12:30 IST)
7 வயது மகனை ஏரியில் வீசிக்  கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரிடமிருந்து ஒரு கடிதத்தைக் காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்
 
சென்னை அடுத்த அம்பத்தூர் லெனின் நகரைச் சேர்ந்தவர் நித்யா. இவருக்கும் அந்த பகுதியைச் சேர்ந்த ரமேஷ்பாபுவிற்கும் 7ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிவடைந்தது. பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்துப் பெற்றுக் கொண்டனர். இவர்களுக்கு 6 வயது குழந்தை ஒன்று உள்ளது.
 
இவர் பொறியியல் முடித்து சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
 
இந்நிலையில் நேற்று  பகல் 2 மணியளவில் தனது மகனை அழைத்துக் கொண்டு புழல் ஏரிக்கு வந்துள்ளார். முதலில் தனது 7 வயது மகனை ஏரியில் வீசியுள்ளார். பின்னர் தானும் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
 
தகவல் அறிந்து வந்த காவல் துறையினரும் மற்றும் தீயணைப்புத் துறையினரும் இருவரது உடல்களை தேடினார்கள். நேற்று மாலை சிறுவனது உடலை மட்டும் கைப்பற்றியுள்ளனர். நித்யாவின் உடலை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
 
நித்யாவின் இருசக்கர வாகனத்தில் ஒரு கடிதம் இருந்துள்ளது. அதில் நித்யா "எனது வாழ்க்கையில் ஏகப்பட்டப் பிரச்சினைகள். ஆகவே அதிக மன உளைச்சலுக்கு ஆளாகினேன். மன உளைச்சல் கொடுத்தக் கடவுளிடம் சென்று கேட்கப் போகிறேன். மகனை விட்டுச் சென்றால் கஷ்டப்படுவான் என்பதால் அவனையும் அழைத்துச் செல்கிறேன்" என்று எழுதியிருந்தார்.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments