Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கர்நாடகாவில் தமிழகத்தைச் சேர்ந்த 5 தொழிலாளர்கள் வெட்டிக்கொலை

கர்நாடகாவில் தமிழகத்தைச் சேர்ந்த 5 தொழிலாளர்கள் வெட்டிக்கொலை
, செவ்வாய், 12 மே 2015 (16:21 IST)
கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டத்தில், தமிழகத்தில் இருந்து சென்ற ஐந்து கூலித்தொழிலாளர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழகத்திலிருந்து கரும்பு வெட்டும் பணிக்காக சுமார் 20 பேரை ராஜேந்திரன் அழைத்துச் சென்றுள்ளார். கரும்பு தோட்ட முதலாளிகளிடம் பணம் வாங்கி, தொழிலாளர்களுக்கு ராஜேந்திரன் சம்பளம் கொடுத்து வந்தார்.
 
இந்நிலையில், ராஜேந்திரன் அளிக்கும் பணத்தில் முறைகேடு செய்வதாக கூறி பிற தொழிலாளிகளிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆத்திரமடைந்த 15 தொழிலாளிகள் ஒன்று சேர்ந்து ராஜேந்திரனையும், அவரது குடும்பத்தாரையும் வெட்டி கொலை செய்துவிட்டு தலைமறைவாகி உள்ளனர்.
 
கொலை செய்யப்பட்டவர்கள் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் (35), சிவம்மா (35), ராஜம்மா (35), காசி (40), ரோஜா (11) உள்ளிட்ட  ஐந்து பேர்.
 
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
தமிழக கூலித் தொழிலாளர்கள் தங்களுக்குள்ளே சண்டை போட்டு கொலை செய்திருப்பது சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil