Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் கமல்ஹாசனுக்காக தனது கட்சி சின்னத்தை விட்டுக்கொடுத்த மும்பை தமிழர் பாசறை அமைப்பு

Webdunia
செவ்வாய், 27 பிப்ரவரி 2018 (07:26 IST)
நடிகர் கமல்ஹாசனின் கட்சிக்கொடியில் உள்ள லோகோ ஏற்கனவே உள்ள சில அமைப்புகளின் லோகோவை போலிருக்கிறது என்ற கருத்து வெளியாகிய நிலையில் அந்த லோகோவின் சொந்தக்காரர்களான மும்பை தமிழர் பாசறை அமைப்பு தற்பொழுது அதனை கமலுக்காக விட்டுக்கொடுத்துள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 
நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை கடந்த 21-ந் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்திலிருந்து துவங்கி, தனது கட்சி பெயரையும் கொடியையும் அறிமுகம் செய்தார்.  
 
மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சி பெயரையும், சிவப்பு, வெள்ளை, கருப்பு ஆகிய நிறங்களுடன் ஒன்றிணைந்த கைகளோடு நடுவில் நட்சத்திரத்துடன் உள்ள தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார். கமல்ஹாசன் கொடியில் உள்ள கைகள் இணைந்த உருவம், ஏற்கனவே உள்ள சில அமைப்புகளின்  லோகோ போன்று இருப்பதாக கருத்துகள் வெளியாகின. 
 
இந்நிலையில் அந்த லோகோவின் சொந்தக்காரர்களான மும்பை தமிழர் பாசறை அமைப்பு தற்பொழுது அதனை கமலுக்காக விட்டுக்கொடுத்துள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதுபற்றி பேசிய மும்பை தமிழர் பாசறை நிர்வாகி ராஜேந்திரசாமி,  எங்களின் கட்சியின் கொடியில் உள்ள சின்னமும் கமல்ஹாசன் பயன்படுத்திய கொடியின் சின்னமும் ஒரே மாதிரியாக இருந்தது. கமல்ஹாசன் ஒரு ஜனநாயக கோவில் கட்ட எங்களின் சின்னத்தை பயன்படுத்த இருக்கிறார். அதனால் இந்த சின்னத்தை பயன்படுத்த புரிந்துணர்வு அடிப்படையில் அனுமதி வழங்கியுள்ளோம் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments