Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வார்டு திறந்து ஓராண்டு நிறைவு! – கூட்டமாக டான்ஸ் ஆடிய முன்கள பணியாளர்கள்!

Webdunia
வெள்ளி, 4 ஜூன் 2021 (12:19 IST)
இந்தியாவில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக கொரோனா வார்டுகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மும்பையில் கொரோனா வார்டு அமைக்கப்பட்ட முதல் ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு முதலாக சுமார் ஒன்றரை ஆண்டு காலத்திற்கும் மேலாக கொரோனா பரவல் இருந்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 கோடியை நெருங்கி வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் கடந்த ஆண்டு முதலாகவே பல்வேறு இடங்களில் கொரோனா சிகிச்சைக்காக சிறப்பு வார்டுகள், சிகிச்சை மையங்கள் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டன.

அவ்வாறாக மும்பையில் கடந்த ஆண்டில் தொடங்கப்பட்ட கொரோனா சிறப்பு வார்டு தனது முதலாவது ஆண்டை நிறைவு செய்துள்ளது. கொரேகானில் அமைந்துள்ள அந்த வார்டில் இதுவரை 21 ஆயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. முதலாவது ஆண்டு நிறைவை அங்குள்ள முன்கள பணியாளர்கள் டான்ஸ் ஆடி கொண்டாடியுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments