முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை: நிபுணர் குழு கூட்டம் திடீர் ரத்து! என்ன காரணம்?

Siva
செவ்வாய், 28 மே 2024 (12:50 IST)
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக இன்று அதாவது மே 28ஆம் தேதி நடைபெற இருந்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக நிபுணர் குழு கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
 முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை கட்டும் திட்டத்திற்கு கேரளா அரசு கடந்த ஜனவரி மாதம் ஆய்வறிக்கையை சமர்ப்பித்திருந்த நிலையில் இந்த மனுவை ஆய்வு செய்ய கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அரசின் நிபுணர் மதிப்பீட்டு குழுவுக்கு அனுப்பப்பட்டது
 
இதனை அடுத்து இன்று நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் இந்த மனு ஆய்வு செய்யபப்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் கேரள அரசின் புதிய அணை கட்டும் திட்டம் தொடர்பான மனு மீதான ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
நேற்று கம்பம் அருகே முல்லைப் பெரியாறு அணை கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் இன்றைய கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோடையன் ஊரில் மீட்டிங்!.. நம்ம கோட்டைன்னு காட்டணும்!.. நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட பழனிச்சாமி!...

டிட்வா புயல்: சென்னை மாநகராட்சியின் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன?

மனைவியை கொலை செய்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவன்!.. கோவையில் அதிர்ச்சி!....

ஒரு கிலோ மல்லிகைப்பூ 4000 ரூபாய்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

ஆபத்தை உணராமல் மெரினாவில் குறைந்த பொதுமக்கள்.. போலீசார் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments