அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய விவகாரம்! பாஜக பிரமுகர் உட்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு!

Prasanth Karthick
வெள்ளி, 6 டிசம்பர் 2024 (09:28 IST)

அமைச்சர் பொன்முடி வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்றபோது சேற்றை வீசிய விவகாரத்தில் பாஜகவை சேர்ந்த பெண் உட்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

ஃபெஞ்சல் புயல் தமிழகத்தில் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல பகுதிகளில் பெரும் சேதமும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. விழுப்புடம் மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சுற்று வட்டார கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது.

 

ஆனால் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், நிவாரண உதவிகள் வழங்க அதிகாரிகள் வரவில்லை என்றும் இருவேல்பட்டு சுற்றுவட்டார மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் அமைச்சர் பொன்முடி, மாவட்ட ஆட்சியர் பழனி உள்ளிட்டோர் அப்பகுதிக்கு சென்று மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 

ALSO READ: விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளாதது ஏன்? - திருமாவளவனே அளித்த விளக்கம்!
 

அப்போது மக்கள் தங்கள் குறைகளை அமைச்சரிடம் கூறி வந்த நிலையில், ஆத்திரம் அடைந்த சிலர் சேற்றை வாரி அமைச்சர் மீதும் கலெக்டர் மீதும் வீசியதால் பரபரப்பு எழுந்தது. உடனடியாக காவலர்கள் அமைச்சரை பத்திரமாக காரில் அனுப்பி வைத்தனர். இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த விரும்பவில்லை என அமைச்சர் பொன்முடி கூறியிருந்தார்.

 

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸார் சேற்றை வீசிய விவகாரத்தில் பாஜக பெண் பிரமுகர் விஜயராணி மற்றும் ராமகிருஷ்ணன் என்ற நபர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments