Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மவுலிவாக்கம் கட்டட விபத்து: அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு

Webdunia
திங்கள், 13 அக்டோபர் 2014 (15:49 IST)
மவுலிவாக்கம் கட்டட விபத்து தொடர்பாக தமிழக அரசு விரிவான அறிக்கையை வரும் டிசம்பர் 4 ஆம் அன்று தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
மவுலிவாக்க கட்டட விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
 
இந்த வழக்கு விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடை பெற்றது. அப்போது தமிழக அரசு சார்பில் மவுலிவாக்கம் கட்டட விபத்து தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இந்த விபத்து தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கவுல் ரெகுபதி தலைமையிலான ஒரு கமிஷனின் விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
 
அப்போது ரெகுபதி தலைமையிலான ஒரு கமிஷனின் விசாரணை அறிக்கை அவசரகோலத்தில் தயாரிக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மனுதாரரின் வழக்கறிஞர் எதிர்ப்புத் தெரிவித்தார்.
 
இதனையடுத்து, இந்த சம்பவத்தின் காரணம் குறித்தும், விபத்திற்குப் பிறகு தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட மீட்பு, நிவாரண உதவிகள், ஆய்வு நடவடிக்கைகள், கட்டட உரிமையாளர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விரிவான அறிக்கையை வரும் டிசம்பர் 4 ஆம் தேதியன்று தாக்கல் செய்ய வேண்டுமென்ன்றும் கூறி, வழக்கை நீதிபதி அன்றைய தினத்திற்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!

Show comments