Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடுமையான பனிமூட்டம்.! ஊர்ந்து சென்ற வாகனங்கள்..!

Senthil Velan
செவ்வாய், 16 ஜனவரி 2024 (11:42 IST)
சீர்காழியில் கடுமையான பனிமூட்டம் ஏற்பட்டதால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி  சென்றன. 
 
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன் கோவில், சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பனியின் தாக்கம்  அதிரித்து  வந்தது.
 
பகல் நேரத்தில் கடும் வெயில் அடித்தாலும்  குளிர்ந்த காற்றும் வீசிவருகிறது. இந்நிலையில்  கடந்த இரண்டு நாட்களாக பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இன்று காலை சூரியன் உதிப்பது கூட தெரியாத நிலை ஏற்பட்டு 9 மணியை கடந்தும் கடும் பனி பொழிவு நீடிக்கிறது.
ALSO READ: பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து! வட மாநில வாலிபர் தீயில் கருகி பலி.!!  
பனி பொழிவு காரணமாக சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்பட்டது. எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத சூழல் நிலவியதால் இருசக்கர வாகனம் முதல்  அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்கை எரியவிட்டபடியே ஊர்ந்து சென்றன. கடும் பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அதிக வரி விதிக்கும் இந்தியா என்று சொன்ன டிரம்ப்.. இப்போது ஏன் திடீர் மாற்றம்?

நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் எக்ஸ்.. மத்திய அரசு குற்றச்சாட்டு

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. 67 ஆயிரத்திற்கு இன்னும் கொஞ்சம் தான்..!

2 பெண்களை காதலித்து இருவருக்கும் ஒரே மேடையில் தாலி கட்டிய இளைஞர்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments