Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்மா கண்முன்னே மகன் வெட்டிக்கொலை!

Webdunia
புதன், 7 நவம்பர் 2018 (16:58 IST)
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழியில் வசித்து வந்தவர் நூர் முகமது. இவர் தன் தாயுடன் வசித்து வந்ததுடன் அருகிலுள்ள கம்பெனிக்கு வேலைக்கு சென்றுவந்தார்.
இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு நூர் முகமது தன் தாயுடன் வீட்டில் இருந்தபோது 3 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் புகுந்து அவரை அரிவாளால் வெட்டிக் கொன்றது.
 
இந்த நிலையிலும் தன் உயிரை காப்பாற்ற தப்பி ஓடிய அவரை விடாத கும்பல் மீண்டும் துரத்தி வெட்டிக் கொன்றது.
 
வீட்டுக்கு வெளியே நடந்த இக்கொலையால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
 
மேலும் தன் கண்முன்னே மகனை இழந்த வேதனையில் தாய் கதறி அழுதது அந்தப் பகுதியை சோகத்தில் ஆக்கியுள்ளது.

கொலையாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments