Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகள் வாழ்க்கைக்காக மருமகனை மன்னித்த மாமியார்; வழக்கில் இருந்து விடுதலை

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2022 (14:51 IST)
சேலம் ஆத்தூரை சேர்ந்த பெண் ஒருவர் தன்னை அரிவாளால் வெட்டிய மருமகனை மன்னித்ததால் அவருக்கு விடுதலை கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
கடந்த 2017ஆம் ஆண்டு சேலம் ஆத்தூரை சேர்ந்த சிவசுப்பிரமணியன் என்பவர் வீட்டுச்சண்டையின்போது மாமியாரை அரிவாளால் வெட்டினார். இதனால் படுகாயமடைந்த மாமியார் சிகிச்சை பெற்று குணம் ஆனார்
 
இது குறித்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் மாமியாரை வெட்டிய வழக்கில் மருமகன் சிவசுப்பிரமணிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது 
 
இந்த நிலையில் மருமகன் சிறையில் இருந்ததால் மகள் மற்றும் பேரக்குழந்தைகள்  கஷ்டப்படுவதை அறிந்த மாமியார் தனது மருமகனை மன்னித்து விட்டதாகவும் எனவே அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் மனுத்தாக்கல் செய்திருந்தார் 
 
இந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் 10 ஆண்டுகள் தண்டனையை ரத்து செய்து சிவசிவசுப்ரமணியனை விடுதலை செய்தது. இந்த வழக்கின் தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments