Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மொரிசியஸ் போனாலும் தப்ப முடியாது!: நீட் ஆள் மாறாட்ட மாணவர் சிக்கினார்!

Webdunia
திங்கள், 30 செப்டம்பர் 2019 (19:38 IST)
நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்துவிட்டு வெளிநாடுக்கு தப்பித்த மாணவரை பிடிக்க போலீஸார் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர்.

தருமபுரியை சேர்ந்த டாக்டர்.சஃபியின் மகன் முகமது இர்ஃபான். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் பலர் கைது செய்யப்படுவதை அறிந்ததுமே தருமபுரி மருத்துவ கல்லூரியில் படித்து கொண்டிருந்த இவர் மொரிசியஸ் தப்பி சென்று விட்டார்.

இர்ஃபான் தந்தை சஃபியிடம் நடத்தப்பட்ட விசாரனையில் இர்ஃபான் ஏற்கனவே மொரிசியஸில் மருத்துவம் படித்து வந்ததும், தற்போது தப்பி சென்று மீண்டும் அந்த கல்லூரியில் படிக்க முயன்றதும் தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து மொரிசியசில் உள்ள சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு தருமபுரி கல்லூரியிலிருந்து விவரங்கள் அனுப்பப்பட்டன. அதன்படி இர்ஃபானை இந்தியாவுக்கு திரும்ப அனுப்ப மொரிசியஸ் அரசாங்கம் சம்மதித்துள்ளது.

விமானம் மூலமாக இந்தியா வரும் இர்ஃபானை பிடிக்க விமான நிலையங்களை உஷார் படுத்தியிருக்கின்றனர். சஃபி அளித்த வாக்குமூலத்தில் மேலும் இரண்டு இடைத்தரகர்கள் பற்றி தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடியுரிமை இருந்தால் தான் வாக்களிக்க முடியும்: தேர்தல் விதிமுறைகளை மாற்றும் டிரம்ப்..!

பாம்பன் புதிய ரயில் பாலம்: திறந்து வைக்க வருகிறார் பிரதமர் மோடி! ஏற்பாடுகள் தீவிரம்!

சென்னையில் தொடர் நகைப்பறிப்பில் ஈடுபட்டவர் என்கவுண்டரில் சுட்டு கொலை: பரபரப்பு தகவல்..!

டெல்லியில் அமித்ஷா - ஈபிஎஸ் சந்திப்பு.. உறுதியானது அதிமுக - பாஜக கூட்டணி..!

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments