Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.95ஐ நெருங்கியது பெட்ரோல் விலை: செஞ்சுரி அடிப்பது எப்போது?

Webdunia
வெள்ளி, 14 மே 2021 (06:34 IST)
தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் காரணமாக கடந்த சில வாரங்களாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயராமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் உயர்ந்து கொண்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
நேற்று ஒருநாள் மட்டுமே பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என்பதும் அதற்கு முன்னர் தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு மேல் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வந்தது என்பதையும் பார்த்தோம்
 
இந்த நிலையில் தற்போது இன்று பெட்ரோல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை 25 காசுகள் உயர்ந்து ரூ.94.09 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது. அதே போல் டீசல் 32 காசுகள் உயர்ந்து 87.81 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது. தற்போது பெட்ரோல் விலை ரூ95ஐ நெருங்கிவிட்ட நிலையில் இதே ரீதியில் சென்றால் இன்னும் ஒரு சில நாட்களில் பெட்ரோல் விலை செஞ்சுரி அடித்து விடும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்
 
மத்திய அரசும் மாநில அரசும் உடனடியாக பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைத்து பெட்ரோல்,டீசல் விலையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் சிசிடிவி கட்டாயம்: மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

சைடிஷ் சரியாக வழங்கவில்லை என தகராறு.. பார் ஊழியர் குத்தி கொலை..!

ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல என சொன்னது ஏன்? ஈபிஎஸ் விளக்கம்..!

பாராளுமன்ற கூட்டம் தொடங்கிய முதல் நாளே துணை குடியரசு தலைவர் ராஜினாமா.. என்ன காரணம்?

எங்களுடன் வாங்க.. தவெகவுக்கு அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி..

அடுத்த கட்டுரையில்
Show comments